Home> World
Advertisement

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யா - கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது!

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 70 வயதை எட்டிய ஒரு நாளுக்குப் பிறகு, பாலத்தின் மீதான தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

ரஷ்யா உக்ரைன் போர்: ரஷ்யா - கிரிமியாவை இணைக்கும் முக்கிய பாலத்தின் ஒரு பகுதி தகர்ந்தது!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முடிவு செய்ததை எதிர்த்து, ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. தற்போது வரை நீடிக்கும் இந்த போரில், உக்ரைனின் பல பகுதிகள்  ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளன. அதே நேரத்தில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கி உக்ரைனுக்கு உதவி செய்து வரும் நிலையில், உக்ரைன் இழந்த சில பகுதிகளை மீட்டு வருகின்றது.

கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது என்றும், ஒரு டிரக் வெடிகுண்டு சனிக்கிழமையன்று தீப்பிடித்ததன் காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டது என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். ரஷிய அதிபர் விளாடிமிர் புட்டினுக்கு 70 வயது பூர்த்தியான ஒரு நாளுக்கு பிறகு, இந்த பாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி சனிக்கிழமையன்று ஒரு டிரக் குண்டு தீ பிடித்ததால், இடிந்து விழுந்தது என என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர். 

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் 70 வயதை எட்டிய ஒரு நாளுக்குப் பிறகு, பாலத்தின் மீதான தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருளை ஏற்றிச் சென்ற டிரக் வெடிகுண்டு வெடித்து, ஏழு ரயில்வே கார்கள் தீப்பிடித்து எரிந்ததால், "பாலத்தின் இரண்டு பகுதிகள் இடிந்து விழுந்தது" என்று ரஷ்யாவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் குழு கூறியது.

மேலும் படிக்க | ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரரின் உருக்குலைந்த தோற்றம்.. உலகை உறைய வைத்த புகைப்படம்

 கிரிமிய தீபகற்பம் ரஷ்யாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். தெற்கில் அதன் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பாலம் மிக முக்கியமானது. பாலம் செயலிழக்கச் செய்யப்பட்டால், தீபகற்பத்திற்கு பொருட்களை கொண்டு செல்வது மிகவும் சவாலானதாக இருக்கும். படையெடுப்பின் போது கிரிமியாவிற்கு வடக்கே உள்ள பகுதிகளை ரஷ்யா ஆரம்பத்தில் கைப்பற்றி அசோவ் கடலில் ஒரு நில நடைபாதையை கட்டமைத்த நிலையில், உக்ரைன் அவற்றை மீட்டெடுக்க ஒரு எதிர் தாக்குதலை நடத்துகிறது.

மேலும் படிக்க | ரஷ்யா உக்ரைன் போர்; தொடரும் ரஷ்ய தொழிலதிபர்களின் மர்ம மரணங்கள்!

மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More