Home> World
Advertisement

ஓக்லாண்ட் ரயில் நிலையத்தில் கத்திகுத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி

ஓக்லாண்டில் உள்ள பிஏஆர்டி மெக்கார்தர் ரயில் நிலையத்தில் இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஓக்லாண்ட் ரயில் நிலையத்தில் கத்திகுத்து சம்பவ இடத்திலேயே பெண் பலி

ஓக்லாண்டில் உள்ள பிஏஆர்டி மெக்கார்தர் ரயில் நிலையத்தில் இரண்டு பெண்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஓக்லாண்டில் உள்ள பிஏஆர்டி மெக்கார்தர் ரயில் நிலையத்தில் ஜூலை 22 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஒரு மர்ம நபர் இரண்டு பெண்களை தாக்கியுள்ளார். அதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து, பிஏஆர் டி மெக்கார்தர் ரயில் நிலையம் மூடப்பட்டு உள்ளது. ரயில் நிலையத்தில் உள்ள கேமராவில் பதிவாகி உள்ள காட்சி மூலம், அந்த மர்ம நபர் யார் என்று சரியாக தெரியவில்லை. ஆனால் சில விவரங்கள் உடனடியாக கிடைத்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர்.

 

 

Read More