Home> World
Advertisement

பாகிஸ்தான் அமெரிக்காவுக்காக எதுவும் செய்யவில்லை: டிரம்ப்

அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்! 

பாகிஸ்தான் அமெரிக்காவுக்காக எதுவும் செய்யவில்லை: டிரம்ப்

அமெரிக்காவுக்காக பாகிஸ்தான் எதுவும் செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்! 

தீவிரவாதிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பாகிஸ்தானுக்கான 1.3 பில்லியன் டாலர் நிதி உதவியை அமெரிக்க அரசு கொடுக்க மறுத்தது. இதுதொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் பின் லேடன் பாகிஸ்தானில் இருந்த போதும் அந்நாட்டிற்கு ஆண்டுக்கு 1.3 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானை தாங்கள் ஆதரித்து வந்ததாகவேக் கூறிய டிரம்ப், ஆனால் பாகிஸ்தான் தங்களுக்காக சிறிய விஷயத்தைக் கூட செய்யாததால் நிதி உதவி நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அமெரிக்க பிரதமர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 

அந்த ட்விட்டரில், "கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்கள் உதவி அளித்ததில் அமெரிக்கா முட்டாள்தனமாக இருந்து உள்ளது. அவர்கள் எங்களுக்கு பொய் மற்றும் ஏமாற்றத்தை  தவிர வேறொன்றையும் கொடுக்கவில்லை. நமது  தலைவர்களை முட்டாள்களாக எண்ணுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் நாம் வேட்டையாடும் தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தைக் கொடுக்கிறார்கள். சிறிய உதவியுடன் அவர்கள் நமக்கு செய்யவில்லை" என கூறி உள்ளார்.

 

Read More