Home> World
Advertisement

ஓய்வூதியத்திற்காக தாயின் சடலத்துடன் வசித்து வந்த நபர் கைது...

தனது தாயின் ஓய்வூதியத்தை சேகரிப்பதற்காக இறந்த தாயின் உடலுடன் ஒரு ஆண்டு வசித்து வந்த ம்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 

ஓய்வூதியத்திற்காக தாயின் சடலத்துடன் வசித்து வந்த நபர் கைது...

தனது தாயின் ஓய்வூதியத்தை சேகரிப்பதற்காக இறந்த தாயின் உடலுடன் ஒரு ஆண்டு வசித்து வந்த ம்பரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்! 

ஸ்பெயின் நாட்டில் தாயாரின் ஓய்வூதிய பணத்தை பெறுவதற்காக தாய் இறந்ததை மறைத்து அவரது உடலை, யாருக்கும் தெரியாமல் ஒரு ஆண்டு காலமாக வீட்டிற்குள்ளேயே மறைத்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அந்த நபர் வசித்து வந்துள்ளார். அவருடைய வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்க  வீட்டில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இந்த தகவலின் பேரில் அந்த வீட்டுக்கு வந்து சோதனை நடத்திய காவல் துறையினர் பேரதிர்ச்சி காத்திருந்தது. உருக்குலைந்த நிலையில், வயதான பெண்மணியின் உடல் கிடந்தது. இதையடுத்து, வீட்டில் வசித்து வந்த நபரை பிடித்துச்சென்ற காவல்துறையினர் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். 

விசாரணையில், பென்சன் பணத்திற்காக தனது தாயாரின் மறைவு குறித்து யாரும் தெரிவிக்காமல், உடலை வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, 92 வயதான அவரின் தாயர் மறைவு குறித்து தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக போலீசார், அவரது மகனை பிடித்துச்சென்றனர். 

 

Read More