Home> World
Advertisement

லாஸ் வேகாஸ் துயரம்: பலி எண்ணிக்கை 59 எட்டியது!

லாஸ் வேகாஸ் துயரம்: பலி எண்ணிக்கை 59 எட்டியது!

அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் கடந்த ஞாயிறு இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவத்தின் போது, துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

அமெரிக்கா மட்டும் இல்லாமல் உலக மக்கள் அனைவரது கவனத்தை ஈர்த்த இச்சம்பவத்திர் இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர், 500-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More