Home> World
Advertisement

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு, பலி எண்ணிக்கை 50 எட்டியது!

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு, பலி எண்ணிக்கை 50 எட்டியது!

அமெரிக்கா, லாஸ் வேகாஸ் நகரில் கேசினோ ஓட்டல் ஒன்றில் நேற்று இரவு நடைப்பெற்ற கச்சேரி கூட்டத்தினில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடிரென துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியதில் 50 பேர் பலியாகியுள்ளனர், 200-க்கும் அதிகமானவர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டதும் அங்கு கூடியிருந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளனர். 

தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 

இச்சம்பவத்தில் இரண்டு நபர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 24 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தப்பி ஓடிய அந்த மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

 

 

 

Read More