Home> World
Advertisement

இந்தியாவிற்கு எதிரான வழியை திறங்கள் - பயங்கரவாதி மசூத் அசார்

இந்தியாவிற்கு எதிரான வழியை திறங்கள் - பயங்கரவாதி மசூத் அசார்

இந்தியாவிற்கு எதிராக முஜாகிதீனுக்கு வழியை திறக்கவேண்டும் என்று பாகிஸ்தான் அரசை பயங்கரவாதி மசூத் அசார் வலியுறுத்தி உள்ளான்.

இந்நிலையில் பதன்கோட் விமானப்படை தளம் மற்றும் உரி ராணுவ முகாம் மீதான பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி மசூத் அசார், இந்தியா விற்கு எதிராக முஜாகிதீனுக்கு வழியை திறங்கள் என்று பாகிஸ்தானை வலியுறுத்தி உள்ளான், காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கத்தின் வார இதழில், இந்தியாவிற்கு எதிராக ஜிகாத் குரூப்கள் தங்களுடையை நடவடிக்கையை முன்னெடுக்க பாகிஸ்தான் அனுமதிக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்து உள்ளான் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.மேலும் காஷ்மீர் மற்றும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க பாகிஸ்தான் தன்னுடைய தைரியத்தை காட்டவேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளான். 

இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை அடுத்து எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில் இவன் பேசியிருப்பது இன்னும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Read More