Home> World
Advertisement

ஜூபிடரின் புதிய தகவல் நாசா வெளியிட்டது

ஜூபிடரின் புதிய தகவல் நாசா வெளியிட்டது

சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கோள் என்ற பெயர் ஜூபிடருக்கு உண்டு.

இந்த கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு ‘நாசா’, கடந்த 2011-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் ஜூனோ என்ற விண்கலத்தை புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவியது.

இந்த ஜூனோ விண்கலம், 170 கோடி மைல்கள் பயணம் செய்து, திட்டமிட்டபடி கடந்த ஜூலை வியாழனின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது. அங்கிருந்து அது ஒலி சமிக்ஞைகளை பூமிக்கு அனுப்பி வருகிறது.

இந்த விண்கலம் தற்போது வியாழன் கிரகத்தின் மிக அருகாமையிலான புகைபடத்தை எடுத்து இன்று அனுப்பி வைத்து உள்ளது. இக்கிரகத்தின் மேகமூட்டத்தின் மேல் 4200 கி.மீ. தூரத்தில் பயணம் செய்து வருகிறது. 

அந்த விண்கலம் வியாழன் கிரகம் மீது பறந்து போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. அதன் மூலம் அங்கு மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான சூறாவளி காற்று வீசுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதே போன்று அங்கு அமோனியா ஆறு ஓடுவதும் தெரியவந்துள்ளது. 

இதனால் வியாழன் கிரகத்தில் காற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. பூமியை விட 11 மடங்கு அதிகமாக மேகங்கள் உள்ளன. 

இந்த ‘ஜூனோ’ விண்கலம் வருகிற 2018-ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் வியாழன் கிரகத்தை அடைந்து தனது பயணத்தை முடிக்கிறது.

Read More