Home> World
Advertisement

சீனா நிலச்சரிவு: 26 பேர் பலி, 9 பேர் மாயம்!

சீனா நிலச்சரிவு: 26 பேர் பலி, 9 பேர் மாயம்!

சீனாவின் குய்ஹோ மாகாணத்தில் கடுமையான மழை பெய்தததை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளூர் போலீஸ், தீயணைப்பு வீரர்கள், மருத்துவத் தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் அரசாங்க ஊழியர்கள் உட்பட 2,800 பேருக்கு மேல், 110 அவசர வாகனங்களுடனும், 20 ஆய்வக கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் எட்டு ட்ரோன்கள் ஆகியவற்றுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 150,000 சதுர மீட்டர் பரப்பளவில் 200,000 கனமீட்டர் குப்பைகள் அழிக்கப்பட்ட பின்னர், எந்த அறிகுறிகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என சின்ஹா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் கருத்துப்படி எட்டு பேர் காயமடைந்துள்ளனர், இன்னும் 9 பேர் காணாமல் போயுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிதி அமைச்சகம் மற்றும் சிவில் விவகார அமைச்சகம் 16 மில்லியன் யுவான்களை நிவாரண நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.

இதுவரை மண் சரிவிலிருந்து, 80 வீடுகளில் இருந்து 289 பேர் மொத்தம்  வெளியேற்றப்பட்டனர்.

மேலும் ஹடோ மற்றும் பாகர் ஆகிய இரண்டு சூறாவளிகளின் விளைவாக கடந்த வாரம் முதல் இந்த மாகாணத்தில் தொடர்ச்சியான மழைக்காடுகள் காணப்படுகின்றன.

Read More