Home> World
Advertisement

புளோரிடா இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு -2 பேர் பலி

புளோரிடா இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு -2 பேர் பலி

அமெரிக்காவின் புளோரிடாவில் போர்ட் மையர்ஸ் என்ற இடத்தில் உள்ள இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். அந்த இரவு விடுதியில் 15-க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத தாக்குதல் பின்னணி உள்ளதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். விடுதியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறினார். 

கடந்த ஜூன் மாதம் ஒர்லிண்டோ மாகாணத்தில் ஒரினச்சேர்க்கையாளர் விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

Read More