பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக MANI என்ற மொபைல் பயன்பாட்டை இந்தியன் ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது!
ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சக்தி காந்தா தாஸ் புதன்கிழமை (ஜனவரி 1, 2020) நாணயத்தாள்களின் மதிப்பை அடையாளம் காண்பதில் பார்வை குறைபாடுள்ள நபர்களுக்கு உதவுவதற்காக MANI (Mobile Aided Note Identifier) என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தினார். பயன்பாட்டை Android Play Store மற்றும் iOS App Store இலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம் எனவும் RBI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி, தனது அறிக்கையில் குறிப்பிடுகையில்., "பார்வை குறைபாடுள்ள (வண்ண குருட்டு, ஓரளவு பார்வை மற்றும் பார்வையற்றோர்) இந்திய ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண உதவும் பல அம்சங்கள் உள்ளன, அதாவது, இன்டாக்லியோ அச்சிடுதல் மற்றும் தொட்டுணரக்கூடிய குறி, மாறி பணத்தாள் அளவு, பெரிய எண்கள், மாறி நிறம், ஒற்றை நிற சாயல்கள் மற்றும் வடிவங்கள் போன்றவை.
இந்த வரிசையில் தற்போது பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு இந்திய ரூபாய் நோட்டுகளை இன்னும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான புதிய வாய்ப்புகளைத் தொழில்நுட்ப முன்னேற்றம் அளித்துள்ளது. இதன் செயலி மூலம் அவர்களின் அன்றாட பரிவர்த்தனைகளை எளிதாக்க RBI விரும்புகிறது" என்று குறிப்பிட்டுள்ளது.
மொபைல் பயன்பாடு, MANI-ஆனது பின்வரும் அம்சங்களைக் கொண்டிருக்கும்: