Home> Technology
Advertisement

ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் இனி ஒரு HelplineNo!

இந்திய ரயில்வே ஜனவரி 1, 2020 முதல் உதவி அல்லது தகவல்களைத் தேடும் பயணிகளுக்காக ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் 139-ஐ பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

ரயில்வே தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் இனி ஒரு HelplineNo!

இந்திய ரயில்வே ஜனவரி 1, 2020 முதல் உதவி அல்லது தகவல்களைத் தேடும் பயணிகளுக்காக ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் 139-ஐ பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

இதன் மூலம், இந்திய ரயில்வே 2020 ஜனவரி 1 தொடங்கி, பல எண் ரயில் விசாரணை ஹெல்ப்லைன் சேவையினை கைவிட்டுள்ளது. மேலும் பயணிகள் இப்போது ஒரே எண்ணில் அனைத்து உதவியையும் பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஹெல்ப்லைன் எண் 139-ஐப் பயன்படுத்தி பயணிகள் தகவல் பெறலாம் அல்லது அவர்களின் புகார்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர, இந்திய ரயில்வே தனது மில்லியன் கணக்கான பயணிகளுக்கு உதவுவதற்காக 'Rail Madad' மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒருங்கிணைந்த ஹெல்ப்லைன் எண் 139-ஐ இந்திய ரயில்வே தொடங்குவதால், பயணிகள் உதவி அல்லது தகவல்களைப் பெற பல எண்களை அழைக்க வேண்டியதில்லை. மேலும் இந்த 'Rail Madad' செயலி மூலம் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்தியன் ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கையில்.,  '' பொது புகார் எண் - 138, கேட்டரிங் சேவை - 1800111321, விழிப்புணர்வு - 152210, விபத்து / பாதுகாப்பு - 1072, எனது பயிற்சியாளரை சுத்தம் - 58888/138, SMS புகார் - 9717630982 மற்றும் புகார் மேலாண்மை அமைப்பு ஆதரவு போர்டல் ஆகியன ஜனவரி 1, 2020 முதல் பயனற்றதாகிவிடும்,'' என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “இது கவனம் செலுத்தும் திருத்த நடவடிக்கைக்கு உதவுகிறது. தரவு பகுப்பாய்வு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் அல்லது நிலையத்தின் தூய்மை மற்றும் வசதிகள் போன்ற பல்வேறு செயல்திறன் அளவுருக்கள் பற்றிய போக்குகளையும் உருவாக்கும், இதனால் நிர்வாக முடிவுகளை மிகவும் துல்லியமாகவும் பயனுள்ளதாகவும் ஆக்குகிறது,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜனவரி 1, 2020 முதல் புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்தது.  இந்த அறிவிப்பின் படி, சாதாரண AC அல்லாத ரயில்களுக்கு கி.மீ.க்கு 1 பைசா, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு கி.மீ.க்கு 2 பைசா (AC  அல்லாத கோச்) மற்றும் AC  வகுப்புகளில் பயணம் செய்ய கி.மீ.க்கு 4 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

"ராஜ்தானி, தத்தாபி, டுரான்டோ, வந்தே பாரத், தேஜாஸ், ஹம்சாஃபர், மகாமனா, கதிமான், அந்தியோடயா, கரிப் ராத், ஜான் சதாப்தி, ராஜ்ய ராணி, யுவா எக்ஸ்பிரஸ், சுவிதா மற்றும் சிறப்பு ரயில்களிலும் இந்த சிறப்பு கட்டணங்கள் பெறுந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது AC MEMU (புறநகர் அல்லாதது), AC DEMU (புறநகர் அல்லாதது) இதேபோல் அறிவிக்கப்பட்ட கட்டண அட்டவணையின்படி வர்க்க வாரியான கட்டணத்தில் மேலே குறிப்பிடப்பட்ட அதிகரிப்பு அளவிற்கு திருத்தப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் ரயில்வே டிக்கெட் கட்டணங்களை உயர்த்தியுள்ள இரயில்வே அமைச்சகம், தற்போது பயணிகள் சேவைக்கு ஒரே ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More