Home> Technology
Advertisement

வீட்டை கண்காணிக்கும் ’மூன்றாவது கண்’ - ரூ.3 ஆயிரத்தில் சிசிடிவி

3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் அற்புதமான சாதனம் ஒன்று உங்கள் வீட்டின் திருட்டை தடுக்க உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? 

வீட்டை கண்காணிக்கும் ’மூன்றாவது கண்’ - ரூ.3 ஆயிரத்தில் சிசிடிவி

கடந்த சில ஆண்டுகளில், வீடுகளில் திருடப்படுவது என்பது அதிகரித்து வருகிறது. கொள்ளையர்கள் நீண்ட நாட்களாக குறி வைத்து கொள்ளையை அரங்கேற்றுவது நடந்து வருகிறது. இதில் இருந்து நம் வீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது அனைவருடைய விருப்பமாக உள்ளது. ஆனால் பலரும் நினைத்துக் கொண்டிருப்பது வீட்டிற்கு சிசிடிவி பொருத்த வேண்டும் என்றால் பல ஆயிரங்கள் செலுத்த வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதில் உண்மையில்லை. 

மேலும் படிக்க | இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் டாப் 5 எஸ்யூவி கார்கள்

வெறும் 3 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் உங்கள் வீட்டை சிசிடிவியில் இருந்து நம் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். அந்த சாதனத்தின் பெயர் டெண்டா CP3. புதிதாக மார்க்கெட்டுக்குள் வந்திருக்கும் பாதுகாப்பு கேமரா அண்மையில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சிசிடிவி பாதுகாப்பு கேமராவின் சிறப்பம்சம் என்னவென்றால் அதனுடைய விலைதான். இந்த கேமராவை வெறும் 2,999 ரூபாய்க்கு நீங்கள் வாங்க முடியும்.

ஜூன் 6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் டெண்டா சிபி3 கேமார அதன் செயற்கை நுண்ணறிவுக்கு பெயர் பெற்றதாக இருக்கும் என கருதப்படுகிறது. Tenda CP3 பாதுகாப்பு கேமரா மூலம் கடந்து செல்லும் மக்களின் நடமாட்டத்தைக் துல்லியமாக கண்காணிக்க முடியும். 

மேலும் படிக்க | வெறும் ரூ. 500-க்கு Kodak ஸ்மாரட் டிவி: பிளிப்கார்ட் அதிரடி, முந்துங்கள்

ஒவ்வொரு திசையிலும் ஒரு கண் வைத்திருக்கும் டெண்டா, கிடைமட்டமாக 360 டிகிரி மற்றும் செங்குத்தாக 155 டிகிரி வரை கண்காணிக்கும். இந்த கேமராவில் வெவ்வேறு நபர்களின் அசைவு மற்றும் அவர்களின் உடல் வடிவத்தை அடையாளம் காணும் வகையில் S-Motion Detection அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, முழு HD தெளிவுத்திறன் மற்றும் ஸ்மார்ட் H.264 வீடியோ என்கோடிங் ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது. டெண்டா CP3 செக்யூரிட்டி கேமராவில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸில் ICR இன்ஃப்ராரெட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

இதனால் நைட் மோடிலும் இதனை இயக்க முடியும். இதனுடன், உங்களுக்கு உள் ஆண்டெனா, பவர் அடாப்டர், சுவர் மவுண்ட் கிட் மற்றும் நிறுவல் வழிகாட்டி வழங்கப்படும்.மேலும், இது ஒலி மற்றும் ஒளி அலாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 128 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுடன் டெண்டா சிபி3 செக்யூரிட்டி கேமராவும் மூன்று மாதங்களுக்கு இலவச கிளவுட் சந்தாவாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் அனைத்து பதிவுகளையும் வசதியாக சேமிக்க முடியும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More