Home> Technology
Advertisement

சந்திரயான்-1: காணாமல் போன விண்கலத்தை நாசா கண்டுபிடித்தது

சந்திரயான்-1: காணாமல் போன விண்கலத்தை நாசா கண்டுபிடித்தது

நிலவை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பி, காணாமல் போனதாக கருதப்படும், 'சந்திராயன்' விண்கலத்தை, அமெரிக்காவின் நாசா கண்டுபிடித்துள்ளது.

இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது.

ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது.

இந்நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, அது இப்போதும் சந்திரனின் மேற்பரப்புக்கு 200 கி.மீ. தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கிறது என நாசாவின் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, நாசாவின் ராடார் பிரிவு இதை கண்டுபிடித்துள்ளது. விண்வெளியில் உள்ள விண்கற்கள் உள்ளிட்டவை குறித்து இந்த, ராடார் பிரிவு ஆய்வு செய்து வருகிறது. 

அப்போது, நிலவுக்கு அருகில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் விண்கலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக, அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

சந்திரயான்-1 தனது பணியை முடித்துவிட்ட நிலையில், இரண்டாவது நிலவுப் பயணத்திட்டமான சந்திராயன்-2 விண்கலம் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More