Home> Technology
Advertisement

ஐபோன் 8-க்கு பதில் சோப்பு கட்டி தந்து ஷாக் கொடுத்த flipkart!

மும்பை அருகே ஆன்லைனில் பணம் கட்டி ஐபோன் 8-யை ஆர்டர் செய்தவருக்கு சோப்பை அனுப்பி வைத்து அதிர்ச்சி அளித்திருக்கிறது பிளிப்கார்ட்.

ஐபோன் 8-க்கு பதில் சோப்பு கட்டி தந்து ஷாக் கொடுத்த flipkart!

மும்பை: நவி மும்பை அருகேயுள்ள பன்வலைச் சேர்ந்தவர் தேம்ராஜ் மெகபூர் நாக்ராலி (வயது-26). இவர் சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கு லேட்டஸ்ட் மாடலான ஐ-போன் 8செல்போன் வாங்க ஆசை. 

அவர் ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்துள்ளார். உடனடியாக தனது கார்டில் அந்த போனுக்கான ரூ.55 ஆயிரத்தையும் செலுத்தியுள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு பிளிப்கார்டில் இருந்து வீட்டுக்கு ஒரு பார்சல் வந்தது. ஆசையாக பிரித்துப் பார்த்த நாகரலிக்கு அதிர்ச்சி பரிசாய் கிடைத்தது. அந்த பார்சல் உள்ளே இருந்தது, ஐபோன் 8-க்கு பதில் இருந்தது சோப்புக் கட்டி. 

அதிர்ச்சியடைந்த நாகரலி, பிளிப்கார்ட் மீது பைகுல்லா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More