Home> Tamil Nadu
Advertisement

4 பெண்களுடன் ஒரே நேரத்தில் டேட்டிங் செய்த இளைஞர்! இறுதியில் தற்கொலை முயற்சி!

ஒரே சமயத்தில் 4 பெண்களை டேட்டிங் செய்த நபரை, 4 பெண்களும் நேரில் சென்று அந்த இளைஞருளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.   

4 பெண்களுடன் ஒரே நேரத்தில் டேட்டிங் செய்த இளைஞர்! இறுதியில் தற்கொலை முயற்சி!

மேற்கு வங்கம்: இன்றைய காலத்தில் இணையத்தில் டேட்டிங் செயலிகள் பல களமிறங்கிவிட்டன.  அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணக்கை தொடங்கி வைத்துக்கொண்டு செய்யும் வேலைகள் கொஞ்சமில்லை. இது சிலருக்கு விளையாட்டாகவும், பலருக்கு வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. இதனால் பல உயிரிழப்புகளும், பிரச்சனைகளும் ஏற்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் தீராத விளையாட்டு பிள்ளையாய் செயல்பட்டு 4 பெண்களுடன் பழகிய இளைஞன் ஒருவன் அப்பெண்களுக்கு உண்மை தெரிந்ததால் தற்கொலைக்கு முயன்றுள்ளான். 

fallbacks

மேற்கு வங்க மாநிலத்திலுள்ள கூச் பெகர் என்கிற மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் சுபமோய் கர். இவர் அங்குள்ள மருந்தகம் ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில் டேட்டிங் செயலி ஒன்றை பயன்படுத்த தொடங்கிய அந்த இளைஞன் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்தில் விஷால் மூன்று பெண்களுடன் பழகுவது போல் இவர் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுடன் டேட்டிங் செய்து நெருக்கமாக பழகி வந்துள்ளார்.  அந்த படத்தில் எவ்வாறு ஒரு ஹீனோயினுக்கு விஷாலின் சுயரூபம் தெரிந்து மற்ற பெண்களிடம் சொல்லுவாரோ, அதேபோல இந்த நால்வரில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உண்மை தெரிந்து இருக்கிறது. தான் மட்டுமல்லாது மற்ற பெண்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்ற உண்மை தெரிந்ததும் இவர் மற்ற மூன்று பெண்களை தொடர்பு கொண்டு இருக்கிறார். 

ALSO READ பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை வழக்கு; பெண் எஸ்.பி நேரில் ஆஜராகி சாட்சியம்

உண்மையறிந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து , இவனை ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி, நாம் நான்கு பேரும் ஒரே நேரத்தில் அவன் வீட்டுக்கு செல்வோம் என்று திட்டம் போட்டு, அந்த இளைஞன் வீட்டிற்கு சென்றனர்.   இவர்கள் வருவது தெரியாமல் வழக்கம்போல காலை நேரத்தில் வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்த சுபமோய் கர், தன் தோழிகளையும் ஒரே நேரத்தில் ஒன்றாக பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் அந்தப் பெண்கள் பயங்கரமான விவாதங்களை தொடங்கி அந்த இளைஞனுடன் சண்டையிட்ட தொடங்கினர். இதனால் அதிர்ந்துபோன சுபமோய் உடனடியாக அந்த இடத்திலிருந்து விலகி ஒரு அறைக்குள் ஓடி விட்டார் . 

அதனையடுத்து அறைக்குள் சென்றவர் விஷ பாட்டில் இருப்பதை பார்த்துள்ளார் என்ன செய்வதென்று அறியாமல் இருந்த சுபமோய் , உடனே அந்த விஷத்தை எடுத்து இருந்துவிட்டு, சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து விட்டார்.  இந்த விஷயம் தெரிந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மயங்கிக் கிடந்த சுபமோயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, அதனையடுத்து சுபமோய் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இளைஞரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு இனி இந்த அடிப்படை வசதிகள் கிடையாது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More