Home> Tamil Nadu
Advertisement

TN Pongal Gift 2024 : பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் இடம்பெறுமா?

TN Pongal Gift Package 2024 : தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.  

TN Pongal Gift 2024 : பொங்கல் பரிசு தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் இடம்பெறுமா?

Tamil Nadu Pongal Gift Package List 2024 : தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் வழக்கம் உள்ளது. கடந்த ஆண்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000 ரொக்கம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு இருந்தது. இந்தாண்டும் இதேபோன்ற பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில், பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்பு ஆகியவை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ரூ.1000 ரொக்கத் தொகை குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 ரொக்கம் இடம்பெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசு மவுனம் காத்து வருகிறது.

மேலும் படிக்க | திமுகவின் கு.க.செல்வம் மறைவு..! 2 மாதங்களாக கோமாவில் இருந்துள்ளார்

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநரின் கடிதங்களில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டிற்கான, பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1கிலோ பச்சரிசி, 1கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கி 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ரூ.238,92 கோடி செலவினம் ஏற்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் கொள்முதல் தொடர்பான அரசாணை என்பதால் இதில் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் வழங்குவது தொடர்பான எந்த விவரமும் இடம்பெறவில்லை. ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான நிதி ஆதாரத்தை திரட்டி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால், பரிசு தொகுப்பு அறிவிப்பு காலதாமதம் ஆகிக் கொண்டிருப்பதாகவும், விரைவில் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | பொங்கலுக்கு ரூ.238.92 கோடி ரூபாய் போதுமா? மக்களுக்கு பொங்கல் பரிசு அதிகரிக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More