Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தென்தமிழகத்தில் இன்றும், அடுத்து வரும் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகம் முதல் குமரி மாவட்ட கடற்கரை பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி காணப்படுவதால் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மற்றபடி எப்போதும் இருக்கும் 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவ வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Read More