Home> Tamil Nadu
Advertisement

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,383 கன அடியாக உயர்வு!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10,383 கன அடியாக உயர்வு!!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,414 கன அடியிலிருந்து 10,383 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் - 58.23 அடி, அணையின் நீர் இருப்பு - 23.38 டிஎம்சி ஆக உள்ளது. 

இதை தொடர்ந்து குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் கிடுகிடு என உயர்ந்து வருவதால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ந்து வருகின்றனர். 

Read More