Home> Tamil Nadu
Advertisement

TN Lockdown: தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள்; என்னென்ன மாற்றங்கள்

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கபட்டதால் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை தேவையில்லை.

TN Lockdown: தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள்; என்னென்ன மாற்றங்கள்

தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் சீற்றம் தணிந்து 4000 என்ற எண்ணிக்கு குறைவாக புதிய தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மே மாதம் மூன்றாவது வாரத்தில் மக்களிடையே பீதியைக் கிளப்பும் வகையில் தொற்றின் அளவு அதிகரித்தது. 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, ஊரடங்கு மற்றும் பல வித தொற்று பரவல் நடவடிக்கைகள் காரணமாக மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

அதன்படி தமிழகத்தில் (Tamil Nadu) கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தொற்று அளவு குறைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (Lockdown) ஜூலை 12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகளின் படி,

ALSO READ | COVID-19 Update: தமிழகத்தில் 3,867 பேருக்கு தொற்று உறுதி, 72 பேர் பலி

* அனைத்து மாவட்டங்களிலும் உணவகங்கள், தங்கும் விடுதிகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதி. 
* டீக்கடைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி. 
* கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி.
* அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.
* வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி. ஆனால் திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
* அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. 
* வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படலாம்.
* தமிழ்நாடு முழுவதும், மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது போக்குவரத்துக்கு அனுமதி.
* 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம். 
* மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
* மாநிலங்களுக்கு இடையேயான தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது.
* திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், உயிரியல் பூங்காக்களுக்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
* பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாய, அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கும், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கும் தடை தொடர்கிறது.
* பள்ளிகள், கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஆராய்ச்சி மாணவர்கள் கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ | FrontLine Workers: முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, தமிழக அரசு அறிவிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More