Home> Tamil Nadu
Advertisement

டிடிவி - அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு! காரணம் என்ன?

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

டிடிவி - அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு! காரணம் என்ன?

ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ டிடிவி தினகரனை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீரென சந்தித்து பேசியுள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள டிடிவி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-

தொகுதியில் மக்களுக்கு சேவை செய்ய அதிகம் முட்டுக்கட்டை போடுகின்றனர். அதன் காரணமாகவே தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தேன், யாரைப்பற்றியும் குறை சொல்லவோ, குற்றம் சொல்லவோ வரவில்லை.

கள்ளக்குறிச்சியை தலைமையாகக் கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க முதல்வரிடம் பலமுறை கோரிக்கை வைத்துள்ளேன். இது முதல்வருக்கு நன்றாகவே தெரியும். அமைச்சர் சிவி சண்முகத்துடன் எந்த பிரச்சினையும் இல்லை.

மக்களுக்கு சேவை செய்ய முடியலையே என்ற மனக்குறை எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. அண்ணன் டிடிவி தினகரனிடம் பேசினேன். ஒரு நல்ல நாள் பார்த்து வரச்சொன்னார். நான் இன்று அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன்.

டிடிவி மக்கள் ஆதரவு பெற்ற தலைவர் என்று ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போதே அனைவருக்கும் தெரியவந்து விட்டது. கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்தும் தகுதி டிடிவி மட்டுமே உள்ளது என்று கூறினார் பிரபு.

Read More