Home> Tamil Nadu
Advertisement

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அன்பு நியமனம்!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக ஐபிஎஸ் அதிகாரி அன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல்  சமீபத்தில் ஐஜியாக பதவி உயர்வு பெற்று ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டார். பின்னர் ஐகோர்ட்டின் உத்தரவின் பேரில் மீண்டும் அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக கூடுதல் பொறுப்புடன் நியமிக்கப்பட்டார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியின் பதவிக்காலம் முடிந்தவுடன் அவரை விடுவித்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது. நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட தாம், நீதிமன்ற உத்தரவில்லாமல் ஒப்படைக்க முடியாது என அவர் தெரிவித்துத்திருந்தார். அந்தவகையில் நேற்று  சுப்ரீம் கோர்ட்டு, அவருக்கு ஆவணங்களை ஒப்படைக்க உத்தரவிட்டது.

இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக டி.எஸ்.அன்புவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

fallbacks

Read More