Home> Tamil Nadu
Advertisement

நம்பிக்கை வாக்கெடுப்பு: ஐகோர்ட்டில் திமுக முறையீடு

நம்பிக்கை வாக்கெடுப்பு: ஐகோர்ட்டில் திமுக முறையீடு

சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முதல்வராக எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது. 

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றார். 

இந்த, நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்தும், அக்கட்சியின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து, திமுக-வின் முறையீடு நாளை அவசர வழக்காக விசாரிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் கூறியுள்ளது.

Read More