Home> Tamil Nadu
Advertisement

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன..!!

வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கன மழை பெய்யும் என  வானிலை அறிக்கை கூறுகிறது. 

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை; வானிலை ஆய்வு மையம் கூறுவது என்ன..!!

இன்று நவம்பர் 13, 2021 அன்று காலை 0830 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நவம்பர்15-ஆம் தேதிக்குள் நிலைகொள்ள வாய்ப்புள்ளது. அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திரா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது

மேலும், வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (3.6 கிலோ மீட்டர் உயரம் வரை) காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் கன மழை பெய்யும் என  வானிலை அறிக்கை கூறுகிறது. 

13.11.2021: கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
 
14.11.2021: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி  மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சேலம், நீலகிரி தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

ALSO READ | வானிலை தகவல்: இப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

15.11.2021: தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

16.11.2021, 17.11.2021: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை (Chennai) பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்க கடல் பகுதிகள்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் உருவாகியுள்ளது.

13.11.2021, 14.11.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

14.11.2021, 15.11.2021: மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் 
சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

16.11.2021, 17.11.2021: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 
சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்

அரபிக்கடல் பகுதிகள்

13.11.2021 முதல் 14.11.2021 வரை: தென்கிழக்கு அரபிக்கடல், கேரள  கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடைஇடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

ALSO READ:RAIN ALERT! இனி ஹெலிகாப்டரில் வெள்ள மீட்புப் பணி - அமைச்சர் அறிவிப்பு 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More