Home> Tamil Nadu
Advertisement

அலங்காநல்லூரில் தடியடி பெண் ஒருவர் பலத்த காயம்

அலங்காநல்லூரில் தடியடி பெண் ஒருவர் பலத்த காயம்

அலங்காநல்லூர் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பெண் ஒருவர் பலத்த காயம் ஏற்பட்டிள்ளது

மதுரை அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என ஊர்த்தலைவர்கள் அறிவித்தனர். ஆனாலும் ஒரு பிரிவினர் நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதனை ஏற்காமல் மக்கள் தொடர் போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்கள் மீது போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டினர். கல்வீச்சும் நடைபெற்றது. இதில் பெண் ஒருவர் பலத்த காயமடைந்தார். சென்னை மரினாவில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தப்பட்டதால் சென்னை முழுவதும் சாலைகள் பொது மக்கள் முடக்கம் செய்தனர்.

Read More