Home> Tamil Nadu
Advertisement

ADMK தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை....

புதிதாக நிறுவப்பட உள்ள ஜெயலலிதா சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நிறுவப்படுகிறது. 

ADMK தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை....

புதிதாக நிறுவப்பட உள்ள ஜெயலலிதா சிலை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நிறுவப்படுகிறது. 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமையகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகே கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி, ஜெயலலிதாவின் சிலை வைக்கப்பட்டது. அந்த சிலையின் தோற்றம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டதையடுத்து புதிய சிலை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரு சிலைகளையும் மாற்ற முடிவு செய்யப்பட்டு சிலைகள் செய்யும் பணிகள் ஆந்திராவைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் 8 அடி உயரத்தில் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் 55 வயதுத் தோற்றத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

fallbacks

fallbacks

பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, ஆந்திராவுக்கு சென்ற அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் சிலைகளை பார்வையிட்டனர். இந்நிலையில் ஜெயலலிதா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்.சிலை இன்னும் 5 தினங்களில் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது. 

 

Read More