Home> Tamil Nadu
Advertisement

மின்சாரம் தாக்கியும், படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் வழங்கினார்

மின்சாரம் தாக்கியும், படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி - முதல்வர் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கியும், கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் இன்று நிதியுதவி வழங்கினார்.

இதைக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று தலைமை செயலகத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், ஈச்சங்ரணை கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன், செய்யூர் வட்டம், பவுஞ்சூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மற்றும் செங்கல்பட்டு வட்டம், காட்டாங்கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த  கே.சேகர் ஆகியோரது மனைவிமார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் காசோலை வழங்கினார்.

அதேபோல, கடலில் மீன் பிடிக்கும் போது படகு கவிழ்ந்தும் உயிரிழந்த திருக்கழுக்குன்றம் வட்டம், மெய்யூர் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் செய்யூர் வட்டம், கடப்பாக்கம் குப்பத்தை சேர்ந்த வேலு ஆகியோரது மனைவிமார்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் காசோலை வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More