Home> Tamil Nadu
Advertisement

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; மாணவர்களை அழைக்கும் தொல்.திருமாவளவன்

டி.என்.பி.எஸ்.சி.CCSE-Gr(II,II-A) திருமா பயிலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் இலவசத் தேர்வுத் தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது மாணவர்கள் பங்கேற்று பயனடையுமாறு தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்; மாணவர்களை அழைக்கும் தொல்.திருமாவளவன்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி.CCSE-Gr(II,II-A) திருமா பயிலகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகள் மற்றும் இலவசத் தேர்வுத் தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது மாணவர்கள் பங்கேற்று பயனடையுமாறு தொல்.திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதுக்குறித்து தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- 

சென்னை, அசோக்நகர், அம்பேத்கர் திடலில் கடந்த சில ஆண்டுகளாக ‘திருமா பயிலகத்தின்’ சார்பில் அரசு வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிலகத்தில் பயிற்சிப் பெற்று அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து ஏராளமானோர் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.

திறன்வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இயங்கும், இப்பயிலகத்தில் 02.10.2019 (புதன்கிழமை) காலை 9 மணிக்கு TNPSC-Gr(II,II(A)) தேர்வுகளுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்குகிறது. மேலும், இலவசத் தேர்வுத் தொடருக்கான சேர்க்கையும் நடைபெறுகிறது. மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. – CCSE-Gr(II,II-A) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுத் தொடரில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் மாணவர்கள் திருமா பயிலகத்தை தொடர்புக் கொள்ள கீழே அழைப்பு எண்கள் கொடுக்கப்பட்டு உள்ளது,.

சென்னை:
7418223330

ஜெயங்கொண்டம்:
9865936454

கடலூர்:
9600244839

மின்னஞ்சல் :
thirumapayilagam@gmail.com

இவ்வாறு விசிக. தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

Read More