Home> Tamil Nadu
Advertisement

CRIME : ஏரியா சிறுமிகளை கேலி கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி - கொலை!

ஏரியா சிறுமிகளை கேலி கிண்டல் செய்தவர் துடிதுடிக்க வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

CRIME : ஏரியா சிறுமிகளை கேலி கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதி - கொலை!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கரம்பவிளை சேர்ந்தவர் 40 வயதான ராஜ். இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான கண்ணன். எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். இதற்கிடையே, கண்ணன் ஏரியா வழியாக செல்லும் சிறுமிகளை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

fallbacks

இதனை ராஜ் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், கண்ணன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்.

திருச்செந்தூர்,கரம்பவிளை,சிறுமிகளை கிண்டல் செய்தவர் கொலை, சிறுமிகளை கிண்டல், கிண்டல், சிறுமிகள், ஆபாசம், வீடியோ, கைது ,நடவடிக்கை, தகாத உறவு, பாலியல் சீண்டல், சிறுமி

இது தொடர்பாக ராஜ், திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு சென்று கண்ணன் மீது புகாரளித்தார். அப்போது ராஜ் காவல்நிலையத்தில் இருக்கும்போதே காவலர்கள் கண்ணனுக்குக் கால் செய்து விசாரணைக்கு வர சொல்லியிருக்கிறார்கள்.தட்டி கேட்டவர் காவல் நிலையம் சென்றது தெரியவரக் கண்ணன் கடும் ஆத்திரமடைந்திருக்கிறார். 

fallbacks

நள்ளிரவில் கையோடு கத்தியை எடுத்து கொண்டு ராஜை மிரட்ட அவரது வீட்டிற்கே சென்றிருக்கிறார். அப்போது அங்கு ராஜ், மற்றும் அவரது மைத்துனர் ராஜ வடிவேல் ஆகியோர் வீட்டில் இருக்க, எல்லாம் தலைகீழாய் மாறிப் போனது. கொலை வெறியில் வந்தவரை ராஜ் மற்றும் ராஜ வடிவேல் இருவரும் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார்கள். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். 

மேலும் படிக்க | ONE SIDE LOVE : லவ் சொல்ல மறுத்த இளம்பெண்ணை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொன்ற சைக்கோ!

fallbacks

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ராஜ், மற்றும் ராஜ வடிவேல் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | CRIME : தகாத உறவுக்காக போலீசாரே கொலைகாரனான கொடூரம் ! - இப்படி ஒரு கொலையா ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More