Home> Tamil Nadu
Advertisement

கத்தியுடன், முன்னாள் முதல்வரை வரவேற்க வந்த தொண்டர்

கத்தியுடன், முன்னாள் முதல்வரை வரவேற்க வந்த தொண்டர்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை திருச்சியில் வரவேற்க வந்த நபர் ஒருவர் கத்தியோடு பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து திருச்சிக்கு விமானம் மூலம் இன்று காலை வந்தடைந்தார். அப்போது அவரை வரவேற்பதற்காக விமான நிலையத்தில் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன் மகளுக்கு திருமணம் வைத்துள்ளதாகவும், ஓபிஎஸ் அவர்களுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்த. அப்போது அவரின் இடுப்பில் இருந்து மறைத்து வைத்திருந்த கத்தி திடீரென கீழே விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரை விசாரித்து வருகின்றனர். மேலும் ஓ.பன்னீர்செல்வத்தை அவர் தாக்கும் திட்டத்துடன் வந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

விசாரணையில் அவரது பெயர் சோழராஜன் எனவும், இவர் திருச்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Read More