Home> Tamil Nadu
Advertisement

ஆசிரியை கொலை வழக்கு: புழல் சிறையில் இளையராஜா தற்கொலை

ஆசிரியை கொலை வழக்கு: புழல் சிறையில் இளையராஜா தற்கொலை

சென்னை அண்ணா நகரில் ஆசிரியை நிவேதா என்பவர் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரது நண்பர் கணபதி என்பவரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விவகாரத்தில் காரை ஏற்றிக் கொண்ட தீயணைப்பு துறை ஊழியர் இளையராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் பொள்ளாச்சியை சேர்ந்த நிவேதா, கணபதி மற்றும் இளையராஜா இருவருடனும் பழகி வந்தது தெரிய வந்தது.

தன்னை விட்டு மற்றொரு ஆணிடம் பழகியதால் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட இளையராஜா வாக்குமூலம் அளித்து இருந்தார். 

இந்நிலையில், தீயணைப்பு வீரர் இளையராஜா புழல் சிறையில் தற்கொலை கொண்டுள்ளார். 

Read More