Home> Tamil Nadu
Advertisement

அனுமதியில்லா பெண்கள் விடுதியை மூட சென்னை HC கிளை உத்தரவு....

தமிழகத்தில் மார்ச் 1 முதல் உரிமமின்றி பெண்கள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.....

அனுமதியில்லா பெண்கள் விடுதியை மூட சென்னை HC கிளை உத்தரவு....

தமிழகத்தில் மார்ச் 1 முதல் உரிமமின்றி பெண்கள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.....

மாநிலத்தின் பல்வேறு நகரங்களில், அரசிடம் உரிமம் பெறாத பல்வேறு பெண்கள் விடுதிகள் இயங்கி வருவதாக புகார் எழுந்துள்ளது. 

இது தொடர்பாக, மதுரையை சேர்ந்த கதிரேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டதாவது:

அரசு அனுமதி பெறாமல், உரிமம் பெறாத பெண்கள் தங்கும் விடுதிகள், மார்ச் 1க்குள் மூடப்பட வேண்டும். இந்த வகையான விடுதிகள், மார்ச் 1 முதல் தொடர்ந்து இயங்க தடை விதிக்கப்படுகிறது. உரிமம் பெறாத விடுதிகள், பிப்., 28க்குள் விண்ணப்பித்து உரிமம் பெறலாம். 

அனுமதி பெறாத குழந்தைகள் காப்பகம் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது’’ என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

 

Read More