Home> Tamil Nadu
Advertisement

நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது: ப.சிதம்பரம்

ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி 

நாடு முழுவதும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தீயாக பரவியுள்ளது: ப.சிதம்பரம்

ஜிஎஸ்டி முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டு புதுமையான ஜிஎஸ்டி 
அமல்படுத்தப்படும் என ப.சிதம்பரம் அறிவிப்பு!!

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் தமிழ் வடிவத்தை வெளியிட்டு விளக்கம் அளித்தார். டெல்லியில் ஏற்கனேவே ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை இரண்டே நாளில் தீயாக பரவியது என்றும் கூறினார். நாடு செல்வம் மிகுந்ததாக மாற வேண்டும்; செல்வம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், என்று கூறினார்.

இதை தொடர்ந்து அவர் மேலும் பேசுகையில், வேலைவாய்ப்பின்மை, விவசாயம், தலித் மக்களின் பிரச்சனை, சிறுபான்மையினர் பிரச்சனையில் நாங்கள் அதிக கவனம் செலுத்து இருப்பதாகவும்,  முக்கியமாக விவசாயிகளின் கடன் குறித்து தேர்தல் அறிக்கை முக்கிய ஒன்றாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் அறிக்கை விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்யும் என கூறியிருந்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், 
> நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் (MNREGA) 150 நாட்களாக அதிகரிக்கப்படும். 
> ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72,000 ரூபாய், 5 ஆண்டுக்கு 3,60,000 ரூபாய் வழங்கப்படும்.
> மத்திய அரசிலுள்ள 22 லட்ச  காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். 
> விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போடப்படும்.
> தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். 
> மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். 
> 2030-க்குள் நாட்டில் இருந்து வறுமை முழுமையாக நீக்கப்படும். 
> தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
> இளைஞர்கள் தொழில் தொடங்கும் போது 3 ஆண்டுகளுக்கு லைசென்ஸ் பெற தேவையில்லை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை நாடு முழுவதும்  மக்களிடையே தீயாக பரவி வருவதாக கூறியவர், பெட்ரோல், டீசல்  எங்களின் உண்மையான ஜிஎஸ்டியின் கீழ் கொண்டுவரப்படும் என்றும்  பெருமிதமாக கூறினார்.

 

Read More