Home> Tamil Nadu
Advertisement

மாணவரை அடித்த ஆசிரியர் கைது!

மாணவரை பிரம்பால் பிண்ணியெடுத்த ஆசிரியரின் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது காவல்துறை.

மாணவரை அடித்த ஆசிரியர் கைது!

சிதம்பரம் :  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது.இந்தப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்புவரை 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மேலும் இது நூற்றாண்டுகளை கடந்த பள்ளி என்ற பெருமைக்குரியது.  இந்தப் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர்களில் சிலர் வகுப்புகளுக்கு சரிவர வராமல்,பள்ளி சீருடையில் வெளியில் சுற்றுவதாக சில புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்த புகார்களை கருத்தில் கொண்டு அப்பள்ளியின் ஆசிரியர்கள் மாணவர்களை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் அம்மாபேட்டையை சேர்ந்த பிளஸ்-2 மாணவர்களான சஞ்சய், அஜய்குமார், நெக்டா பாலன், சுசீந்திரன், சூர்யா, சந்துரு ஆகிய மாணவர்கள் ஒருசில வகுப்புகளை கட் அடித்துவிட்டு வெளியில் சுற்றுகிறார்கள் என்று ஆசிரியர்களுக்கு தெரிந்தது.  இதனைத்தொடர்ந்து அந்த பள்ளியில் பணிபுரியும் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் (55) நேற்று முன்தினம் அந்த மாணவர்களை அழைத்து கண்டித்தது மட்டுமல்லாமல், மாணவர்களை முட்டி போட வைத்தார்.மேலும் மாணவன் சஞ்சையை, ஆசிரியர் சுப்பிரமணியன் பிரம்பால் சரமாரியாக தாக்கியும், காலால் எட்டியும் உதைத்துள்ளார்.

fallbacks

உடனே வகுப்பில் இருந்த மற்ற மாணவர்கள் செல்போன் மூலம் இந்த காட்சியை வீடியோ எடுத்தனர்.பின்னர் அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டதையடுத்து இந்த வீடியோ வைரலானது.இந்த வீடியோவை கண்ட அனைவரும் அதிர்ந்தனர்.  அந்த வீடியோவில் பதிவான காட்சியில் வகுப்பறையில் மாணவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கின்றனர். வகுப்பறையின் நுழைவு வாயிலில் முட்டி போட்டிருக்கும் ஒரு மாணவரின் தலை முடியை பிடித்துக்கொண்டு முதுகில் பிரம்பால் பயங்கரமாக அடிக்கிறார்.

வலி தாங்க முடியாமல் முட்டி போட்டபடியே துள்ளும் அந்த மாணவனை கோபம் அடங்காத அந்த ஆசிரியர் தனது காலால் எட்டி உதைக்கிறார்.இந்த சம்பவம் குறித்து சிதம்பரம் நகர போலீசில் மாணவன் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.  அதன்படி 294(பி), 323, 324, பொது இடத்தில் திட்டுதல், வன்மமாக பேசுதல், 18 வயதுக்கு கீழ் உள்ள மாணவனை தாக்குதல், எஸ்.சி.எஸ்.டி. பிரிவின் கீழ் ஆகிய வழக்குகள் உள்பட மொத்தம் 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஆசிரியர் சுப்பிரமணியனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட ஆசிரியரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதையடுத்து சிதம்பரம் கிளைசிறையில் அடைக்கப்பட்டார்.இவ்வாறு கொடுரமாக மாணவர்களை ஆசிரியர் தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால் ஆசிரியர் சுப்பிரமணியனை சஸ்பெண்டு செய்யுமாறு மாவட்ட கல்வி நிர்வாகம் உத்தரவினை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ மாணவனை அடித்து உதைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்; பதற வைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More