Home> Tamil Nadu
Advertisement

ஓபிஎஸ் மகன், சகோதரரை கைது செய்ய ஐகோர்ட் தடை

ஓபிஎஸ் மகன், சகோதரரை கைது செய்ய ஐகோர்ட் தடை

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் மற்றும் சகோதரர் ராஜா ஆகியோரைக் கைது செய்வதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.  

ஏப்ரல் 6-ம் தேதி நேதாஜி நகர் மசூதி அருகே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும், அங்கு தேர்தல் பணிமனை அமைத்திருந்த டிடிவி தினகரன் தரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக காவல்துறையினர் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு இரண்டு பேரும் சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். 

Read More