Home> Tamil Nadu
Advertisement

கழிப்பறை-படுக்கை வசதியுடன் தமிழக அரசு விரைவு பேருந்துக்கள்...

ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட 500 விரைவு பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

கழிப்பறை-படுக்கை வசதியுடன் தமிழக அரசு விரைவு பேருந்துக்கள்...

ரூ.154 கோடி செலவில் வாங்கப்பட்ட 500 விரைவு பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ரூ.154 கோடி செலவில் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 500 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. இந்த பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பஸ்களின் வடிவமைப்புகளை பஸ்சுக்குள் ஏறிச் சென்று பார்வையிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பஸ்களை கொடி அசைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அற்பணித்தார்.

இந்த பஸ்களில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு 235 பஸ்களும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 118 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சேலத்துக்கு 60, விழுப்புரத்துக்கு 18, மதுரைக்கு 14, கும்பகோணத்துக்கு 25, கோவைக்கு 16, நெல்லைக்கு 14 பஸ்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களில் கழிவறை, படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பஸ் பின்னோக்கி வருவதை அறியவும், பயணிகளின் இறங்கும் இடத்தை அறிவிக்கவும், ஒலி எச்சரிக்கை கருவி வசதியும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் மாற்று திறனாளிகள் கொண்டு வரும் ஊன்று கோலை பாதுகாப்புக்காக வைக்கவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்னணு வழித்தட பலகைகள், தீயணைப்பு கருவிகளும் பஸ்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே சுற்றுலா போக்குவரத்து கழக புதிய பஸ்களும் தொடங்கி வைக்கப்பட்டன.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி சீனிவாசன், தலைமை செயலாளர் சண்முகம், போக்குவரத்து துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Read More