Home> Tamil Nadu
Advertisement

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்

347 கோடி ரூபாய் செலவில், அரியலூர் தெற்கு கிராமத்தில் மொத்தம் 7 347 கோடி செலவில் கட்டப்படவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவிக்கிறது.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்

தமிழக (Tamil Nadu) முதல்வர் எடப்பாடி கெ. பழனிசாமி அவர்கள், செவ்வாயன்று வீடியோ கான்ஃபெரன்சிங் (Video conferencing) மூலம், அரியலூர் (Ariyalur)  மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி (Medical College hospital) மருத்துவமனையின் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டினார் (foundation). மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பல உள்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைத்தார்.

சுமார் 347 கோடி ரூபாய் செலவில், அரியலூர் தெற்கு கிராமத்தில் கட்டப்படவிருக்கும் இந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கும் என்று அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவிக்கிறது.

இது தவிர, 40 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்ட சி.டி ஸ்கேன் உபகரணங்கள் மற்றும் நேரியல் முடுக்கி ஆகியவற்றையும் திரு. பழனிசாமி (K.Palanisamy) துவக்கி வைத்தார். மேலும், கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 25 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள ஒரு நேரியல் முடுக்கியையும், திருப்பூர், ஈரோடு, பெரம்பலூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 2,475 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள சி.டி ஸ்கேன் உபகரணங்களின் பயன்பாட்டையும் முதல்வர் துவக்கி வைத்தார்.

ALSO READ: தமிழகத்தில் படிப்படியாக குறையும் கொரோனா; இன்று 3,616 பேருக்கு தொற்று உறுதி..!

சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் கே.சண்முகம், சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மற்றொரு நிகழ்வில், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கோவிட் -19 எதிர்ப்பு முயற்சிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் விரைவு வாகனங்களை முதல்வர் (Chief Minister) கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், காவல்துறை பணிப்பாளர் ஜே.கே. திரிபாதி மற்றும் மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

ALSO READ: பொதுமக்கள் நலன் கருதி நடமாடும் காய்கறி அங்காடி சேவை தொடரும் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Read More