Home> Tamil Nadu
Advertisement

நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை!!

தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது! 

நீட் தேர்வில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை!!

தமிழ் மொழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது! 

நீட் தேர்வில் தமிழ்மொழி வினாத்தாள்களில் பிழை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் பிழை இருந்த 49 வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள் வீதம் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மதிப்பெண் பட்டியலை திருத்தம் செய்யப்பட்ட பிறகு மீண்டும் மதிப்பெண் பட்டியலை சிபிஎஸ்இ வெளியிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நிறுத்தவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. 

இந்த தீர்ப்பினை எதிர்த்து மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் தர வேண்டும் என்ற உயர்நீதிமன்ற கிளை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கடந்த 16 ஆம் தேதி சிபிஎஸ்இ மேல்முறையீடு தாக்கல் செய்ததது.

இந்த மனுவை இன்று விசாரணை செய்த உச்சநீதிமன்றம் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.  

 

Read More