Home> Tamil Nadu
Advertisement

'பாடும் நிலா... எழுந்து வா' SPB-ஐ அழைக்கும் Super Star! ரசிகர்களிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்!!

மூத்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமண்யம் விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்ய வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள வெகுஜன பிரார்த்தனையில் சேருமாறு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'பாடும் நிலா... எழுந்து வா' SPB-ஐ அழைக்கும் Super Star! ரசிகர்களிடம் பிரார்த்திக்குமாறு வேண்டுகோள்!!

சென்னை: மூத்த பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமண்யம்  (SP Balasubramaniam) விரைவாக குணமடைய பிரார்த்தனை செய்ய வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ள வெகுஜன பிரார்த்தனையில் சேருமாறு நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) மற்றும் பலர் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

74 வயதான நட்சத்திர பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், COVID-19 –ஆல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“எஸ்.பி.பி. விரைவில் குணமடைய இன்று மாலை 6 முதல் 6.05 வரை அனைவரும் பிரார்திப்போம்” என ரஜினி ரசிகர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடும் நிலா என எஸ்.பி.பி.-ஐ அழைத்த ரஜினி அவர் விரைவில் குணமடைந்து மக்களுக்கு மத்தியில் வருவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

ALSO READ: SP பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: புதிய அறிக்கை

மூத்த தமிழ் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இன்று மாலை 6 மணிக்கு ஒரு நிமிடம் மௌனம் கடைபிடித்து எஸ்.பி.பி-க்காக பிரார்திக்குமாறும், பாலசுப்பிரமண்யம் பாடிய ஒரு பாடலை இசைக்குமாறும் மக்களையும் தொலைக்காட்சி சேனல்களையும் கேட்டுக்கொண்டார்.

"என் நண்பர் பாடும் நிலா குணமடைய வேண்டும், அதுதான் இந்த கூட்டுப் பிரார்த்தனையின் நோக்கம்” என்று பாரதிராஜா கூறினார்.

Read More