Home> Tamil Nadu
Advertisement

தமிழக மீனவர்கள் 51 பேர் விடுதலை செய்தது இலங்கை அரசு

தமிழக மீனவர்கள் 51 பேர் விடுதலை செய்தது இலங்கை அரசு

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 தமிழக மீனவர்களை இன்று விடுவிக்கப்பட்டனர்.

இந்தியா - இலங்கை இடையிலான வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன் கொழும்புவில் நடந்தது. அந்த கூட்டத்தில் மீனவர்கள் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருதரப்பு பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவு பெற்றது. இதையடுத்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 51 மீனவர்களும் இந்திய அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர். இதேபோன்று மூன்று இலங்கை மீனவர்களை இந்திய அரசு விடுதலை செய்தது.

Read More