Home> Tamil Nadu
Advertisement

மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய ஏழு மாத குழந்தை உயிரிழப்பு

சிவகாசி அருகே மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய ஏழு மாத குழந்தை உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை.

மசாலா பாக்கெட் கவரை விழுங்கிய ஏழு மாத குழந்தை உயிரிழப்பு

சிவகாசி அருகே உள்ள மாரனேரி துரைச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தீஸ்வரன் ஈஸ்வரி தம்பதியினர் இவர்களுக்கு பூவிழி என்ற மகளும் கலை கதிர் என்ற ஏழு மாத ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கலைக்கதிர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மசாலா பாக்கெட்டின் ஒரு பகுதியை விழுங்கியதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக சிவகாசி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. 

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. தொடர்ந்து குழந்தையின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் மாரனேரி காவல் தேடினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏழு மாத குழந்தை உயிரிழந்தது சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More