Home> Tamil Nadu
Advertisement

பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவம்பர் 10 மற்றும்11) விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

சென்னை: 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நவ.10,11ஆம் தேதிகளில் விடுமுறை விடுப்பட்டுலல்துள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அரசு செயலாளர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதாவது தென்கிழக்கு வங்க கடல் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 11ஆம் தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும். இதன் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் கன மழை ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இன்று டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம்  மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்து வருகிறது. 

அதேபோல சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

தென்மாவட்டங்களில் சற்று மழை குறைந்தாலும் டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்களின் இயல்பு பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் அனைத்து பகுதிகளும் இன்னமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் இருக்க மின்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடரும் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கையாக 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் (நவம்பர் 10 மற்றும்11) விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

9 மாவட்டங்கள் விவரம்: 
சென்னை, காஞ்சி, 
திருவள்ளூர், 
செங்கல்பட்டு, 
கடலூர்,
தஞ்சை, 
நாகை, 
மயிலாடுதுறை, 
திருவாரூர்

fallbacks

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More