Home> Tamil Nadu
Advertisement

சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஷை கைது செய்ய தடை: சென்னை உயர்நீதிமன்றம்

வரும் 27 ஆம் தேதி வரை ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை.

சர்கார் பட விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஷை கைது செய்ய தடை: சென்னை உயர்நீதிமன்றம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'சர்கார்' படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அரசியல் தலைவர்களை விமர்சிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது எனவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோரி அ.தி.மு.க-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் திரையரங்குகளில் வைக்கப்பட்டு இருந்த நடிகர் பேனர்களை கிழித்தனர். இதனால் சில இடங்களில் கட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் மனுதாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், வரும் 27 ஆம் தேதி வரை 'சர்கார்' பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசை கைது செய்ய சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Read More