Home> Tamil Nadu
Advertisement

பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில் "விருந்து" வைத்த போலீஸ்..!

சேலம் அருகே பிரியாணிக்கு வைக்கப்பட்ட குழம்பில் புழு மிதந்ததாக ரகளையில் ஈடுபட்ட  7 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரியாணி கடையில் ரகளை - காவல் நிலையத்தில்

சேலம் மாவட்டம் திருவாகவுண்டனூர் பைபாஸ் சாலையில் பிரபல பிரியாணி கடை இயங்கி வருகிறது. ஆதாம் பாஷா என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடையில் அருண் குமார் என்பவர் அவரது நண்பர்களுடன் நேற்று பிரியாணி சாப்பிட வந்திருக்கிறார். பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட சிறிது நேரத்தில் பிரியாணிக்கு வைக்கப்பட்ட குழம்பில் புழு மிதந்ததாகக் கூறப்படுகிறது.

fallbacks

அதை மொபைல் போன் மூலம் வீடியோ எடுத்தவர்கள் தனது நண்பர்களுக்கும் உணவுதுறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்து கடையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

fallbacks

இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி நேரில் வந்து ஆய்வு செய்தனர். பிரியாணிக்கு வைக்கப்பட்ட குழம்பை  ரசாயன பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அதில் புழுக்கள் போன்று ஏதும் இல்லை என்று தெரியவந்தது. இதற்கிடையே பிரியாணி கடை உரிமையாளருக்கும் சாப்பிட வந்தவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் பிரியாணி கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

fallbacks

இந்த சம்பவத்தை அறிந்த சூரமங்கலம் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் உடனே பிரியாணி ஓட்டலுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட அருண் உட்பட 7 பேரை கைது செய்தனர். கடை உரிமையாளரிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டதாக ஆறு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஜாதகத்தை நம்பி 4 மாத குழந்தையைக் கொலை செய்த தாய்! பழனி அருகே கொடூரம்...

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More