Home> Tamil Nadu
Advertisement

கொரோனாவால் உயிரிழந்த போலீசார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனாவால் உயிரிழந்த போலீசார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம்

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் உச்சமடைந்துள்ள நிலையில், நேற்று ஒரு நாளில் மட்டும் 34,875 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,297 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு (Coronavirus) உள்ளாகி 365 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் (Tamil nadu) இதுவரையிலான மொத்த பாதிப்பு 16,99,225 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில்  வருகிற 29 முதல் 31 தேதிக்குள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என, பல கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் மருத்துவ ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படாது, ஒத்தி வைக்கப்படும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி 13 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு தலா 25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 36 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More