Home> Tamil Nadu
Advertisement

கோவை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி!

கோவை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி!

கோவை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை சுந்தராபுரத்தில் பொள்ளாச்சியிலிருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த கார், ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த ஆடடோ மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காணமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் பொது நிவாரண நிதியிலிருந்த வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

 

Read More