Home> Tamil Nadu
Advertisement

என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது: ரஜினி

உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு நான் பெருமைபடுகிறேன் என நடிகர் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது: ரஜினி

உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு நான் பெருமைபடுகிறேன் என நடிகர் ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்....

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதன்முறையாக மாமா ரஜினியின் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத வேலைகள் நடந்து முடிந்துவிட்டதாகவும், நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பின், நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்த்ருந்தார். 

இதையடுத்து, சென்னையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  நீக்கப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் சேர்த்துக்கொள்ளலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், "எண்ணெய் வாழவைத்த தெய்வங்களான எனது அன்பு ரசிகர்களுக்கு, நான் கடந்த 23 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில சில உண்மைகளை சொல்லியிருந்தேன். அது கசப்பானதாக இருந்தாலும் அதில் உண்மைகளையும், நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு என மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

உங்களைப் போன்ற ரசிகர்களை நான் அடைந்ததற்கு மிகவும் பெருமைபடுகிறேன். என்னையும், உங்களையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Read More