Home> Tamil Nadu
Advertisement

மீனவர்களை மீட்க கோரி ரயில் மறியல் போராட்டம்

காணாமல் போன மீனவர்களை மீட்க கோரி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார். தமிழக அரசு மீட்பு பணியை துறிதப்படுத்துமா?

மீனவர்களை மீட்க கோரி ரயில் மறியல் போராட்டம்

கடலுக்குச் சென்று காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்க வேண்டும் என வலியுறுத்தி குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

ஓகி புயலால் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் காணாமல் போனார்கள். அவர்களை கண்டுபிடிப்பதில் தமிழக அரசு தாமதம் செய்து வருகிறது எனக் கூறி மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சின்னத்துறை உட்பட சுமார் 10 கிராமங்களைச் சேர்ந்த மீனவ குடும்பத்தார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னத்துறையில் இருந்து குழித்துறை ரயில் நிலையம் வரை நடந்தே சென்றனர். அங்கு சென்ற மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தினர் குழித்துறை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மீனவர்கள் போராட்டம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுடன் நெல்லை டி.ஐ.ஜி. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

Read More