Home> Tamil Nadu
Advertisement

அரசிதழ் பதிவுபெறாத ஊழியர்களுக்கு ₹ 7000 வரை போனஸ்!

புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

அரசிதழ் பதிவுபெறாத ஊழியர்களுக்கு ₹ 7000 வரை போனஸ்!

புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெறாத ஊழியர்களுக்கு போனஸ் வழங்க புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

இதுத்தொடர்பாக புதுவை முதல்வர் வே.நாராயணசாமி அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது...

"புதுச்சேரி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவுபெறாத B-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து C-பிரிவு ஊழியர்களுக்கு இந்த நிதியாண்டுக்கான போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை எனது அரசு வழங்கியுள்ளது.

இதற்கான அரசாணை நிதித்துறையான் மூலம் வெளியிடப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு உடனடியாக வழங்கப்படும். இதன்படி, அரசுத்துறைகளில் பணிபுரியும் B-பிரிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து C-பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக அதிகபட்சமாக ₹.6908/- வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகப்பட்சமாக ₹.1,184/- வழங்கப்படும்.

இதற்காக புதுச்சேரி அரசுக்கு ₹.18 கோடி கூடுதலாக செலவாகும். உற்பத்தி சார்ந்த அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படவேண்டி போனஸ் தொகை குறித்த அறிவிப்பு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டவுடன், அது குறித்து அறிவிக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார்!

Read More