Home> Tamil Nadu
Advertisement

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் எஞ்சிய துறைகளில் பணிபுரிவோருக்கு நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை - முதல்வர் எடப்பாடி அறிவிப்பு!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புயலாக மையம் கொண்டுள்ளது. இது இன்று மாலை மேலும் தீவிரமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் நிவர் புயல் (Nivar Cylone) தொடர்பாக உதவிகளை மேற்கொள்ள சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். 

 

fallbacks

 

ALSO READ | நிவர் புயல்: 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் கூறியவாவது:-

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் (Tamil Naduமுழுவதும் நாளை பொதுவிடுமுறை அளிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணியில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது என்றார்.

 

fallbacks

அதேபோல் நாளை புதுச்சேரியிலும் (Puducherry) பல ரயில் மற்றும் பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது என சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நிவர் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் புதுச்சேரியில் இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை 6 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

fallbacks

 

ALSO READ | Nivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More